அபிராமி அந்தாதி -- 13 கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே (12) ஈசனின் தலையில் அம்பிகையின் திருப்பாதங்கள் மாலை போன்று இருப்பதை த்யானிக்க, பட்டர் பெருமான், அடுத்து, அம்பிகையிடம் ஆனந்தமாக, தன் பாக்கியத்தை உணர்வதாக பகிர்ந்து கொள்கிறார். கண்ணியது உன் புகழைத்தான், நான் எப்போதும் கருதியது உன்னைப்பற்றிய உன் பராக்ரமங்களைத்தான். அம்பாளின் பராக்ரமங்களுக்கு அளவு தான் ஏது? திரிபுர சிந்தரியான அவளின் வீரம்மிக்க தேவியரோடு அவள் பண்டாசுரனை அழித்த கதையை படிக்கும் போதெல்லாம் நமக்கும் அவளது அந்த பராக்ரமத்தின் சாயல் தொற்றிக்கொள்ளும். அப்படி அவளுடைய புகழையே தான் பேசிகிறேன் என்று பட்டரும் சொல்கிறார். அவளைப்பற்றியே பேச, அவளைப்பற்றியே படிக்க வேண்டும் அல்லவா? தெரியாத ஒருவரைப்பற்றி எத்தனை நேரம் பேசமுடியும்? அம்பாளை முழுமையாக தெரிந்து கொள்வது என்பது மூவருக்கே முடியாத விஷயம். ஆதலால் தான் கற்பது என்று சொன்னார். கற்பது என்று சொன்னதால், சதா கற்றுக்கொண்டே இருக்கிறார...